பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிகளில்
” ஒபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் இந்திய ராணுவம் வான்வழி தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவிக்கையில்,
“பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. எங்கள் நடவடிக்கைகள் கவனமான முறையில், கணக்கிடப்பட்டுள்ளன. எந்த பாகிஸ்தான் ராணுவ முகாம்களும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுத்து செயற்படுத்தும் முறையில் இந்தியா நிதானமாகவுள்ளது.” எனத் தெரிவித்துள்ளது.










Leave a Reply