,

16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு”

Spread the love

16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று (18.04) வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஸ்ரீ தலதா வழிபாடு, ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், மல்வத்து, அஸ்கிரி தேரர்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டுதலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பதோடு, அவர்கள் கொழும்பிலிருந்து சிறப்பு தொடருந்து மூலம் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ தலதா வழிபாடு, இன்று முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

ஆரம்ப நாளான இன்று (18) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், பக்தர்களுக்கு “தலதா” புனித தந்த தாதுவை வழிபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாளை (19.04) சனிக்கிழமை முதல் தினசரி பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் பக்தர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page