பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 43 வயது நபர் ஒருவரைக் களுத்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய பாணந்துறை ஹொரேதுடுவ பாலத்திற்கு அருகில் வைத்து குறித்த சந்தேக நபரைச் சோதனையிட்ட போது அவரது காற் சட்டைப் பையில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கொலைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தக்கூடிய பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்படும் மூன்று ரவைகள், மற்றும் குறித்த துப்பாக்கிக்கான கொள்கலன் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.










Leave a Reply