, ,

பள்ளத்திற்குள் பாய்ந்த பேருந்து,11 பேர் பலி 30க்கும் மேற்பட்டோர் காயம்!

Spread the love

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நுவரெலியா கண்டி பிரதான வீதியில் ரம்போட பகுதியில்
விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (11.05)அதிகாலை ஏற்பட்ட குறித்த விபத்தில், 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், சாரதி உட்பட 30 இற்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில்,கொத்மலை மற்றும் நுவரெலியா  வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கொத்மலை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page