, ,

அடுத்த கட்ட நகர்வுக்காக நாளைய தினம் கூடவுள்ள தமிழரசு கட்சி

Spread the love

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியுள்ள தமிழரசு கட்சி,

உள்ளூராட்சி அரசியலமைப்பின் அடுத்த கட்ட செயற்பாடுகளை ஆராய்வதற்காக நாளைய(11)தினம் கூடவுள்ளது.

குறித்த சந்திப்பில், சபைகளில் செயற் படுவது, மற்றும் தவிசாளர் முதல்வரைத் தீர்மானிப்பது போன்ற கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,புளட் ரெலோ ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தமிழரசுக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், குறிப்பாக செல்வம் அடைக்கலநாதன் தமிழ் தேசிய கூட்டமைப்பாகச் செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் யாழ் மாநகர சபையின் ஆட்சி நடவடிக்கை தொடர்பில் முன்னாள் எம்.பி, எம்.ஏ சுமந்திரன் பல நகர்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page