டொனால்ட் ட்ரம்பினால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட வரி இடைநிறுத்தம்

Spread the love

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினால்,

இலங்கை உட்பட பல நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள்,  உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

இருந்த போதிலும் சீனாவிற்கு எதிரான வரிகள் மட்டும் 125% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்
சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா நேற்றிலிருந்து (9.04)  104% வரியை விதித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சீன நிதி அமைச்சகம் இன்று பிற்பகல் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 84% வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் சீனாவிற்குப்  பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா மீண்டும் ஒருமுறை வரி விகிதத்தை அதிகரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதேயளவு  வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தமை இங்கு  சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page