வடக்கு மாகாணத்தின் காணிகள் தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமைத் தீர்வுத் துறையால் வர்த்தமானி அறிவிப்பு எண் 2430 வெளியிடப்பட்டது என்று அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில்,
அரசாங்கம் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதாக உறுதியளித்து விட்டு மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, வடக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள், குறித்த வர்த்தமானிக்கு எதிராகத் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்நிலையில், குறித்த வர்த்தமானியை அரசாங்கம் திரும்ப பெற்றுள்ளது.
வடக்கில் 5,940 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கு அந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது










Leave a Reply