,

பதுளை பேருந்து விபத்து – சாரதி கைது

Spread the love

 

பதுளை – மஹியங்கனை வீதியில் துன்ஹிந்த – திம்பிரிகஸ்பிட்டிய 4 ஆம் கட்டை பகுதியில், சுற்றுலா பேருந்தொன்று விபத்துக்குள்ளான
சம்பவம் தொடர்பில், குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில், இரு பெண்களும் ஆண் ஒருவருவமாக மூவர் உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் 33 பேர் பதுளை போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன்,
அவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குகின்றனர்.

சிகிச்சை பெற்றுவரும் இரு பெண்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அநுராதபுரம் – தம்புத்தேகம பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றே நேற்று விபத்துக்குள்ளானது.

விபத்து தொடர்பில், கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதி பொலிஸ் பாதுகாப்பின் கீழ்,
பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page